மக்களிடம் வன்முறையை தூண்டுவதாக கமல் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்

தமிழக சட்டசபை உறுப்பினர்களுக்கு எதிராக மக்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் நடிகர் கமலஹாசன் நடந்து கொள்வதாக இந்திய தேசிய லீக் கட்சி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. கடந்த 18ஆம் தேதி நடிகர் கமலஹாசன் சட்டசபை உறுப்பினர்கள் தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில் “People of Tamizhnadu, Welcome your respective MLAs with the respect they desrve back home” என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது தமிழ்நாட்டு மக்களே தங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களை தகுந்த மரியாதையுடன் வரவேற்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து இந்திய தேசிய லீக் கட்சியின் வட சென்னை மாவட்ட தலைவர் பிர்தவ்ஸ் நடிகர் கமலஹாசன் மீது இன்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.