நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே ரஜினியின் எண்ணம்

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் ரஜினியை இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், மற்றும் அந்த கட்சியின் நிர்வாகிகள் இராம.ரவிக்குமார் மற்றும் குருமூர்த்தி ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே ரஜினியின் எண்ணம். ரஜினி அரசியலுக்கு வருவார்.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார். சிங்கமாக, சிங்கிளாக ரஜினி அரசியலுக்கு வருவார் என்று தெரிவித்தார். நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் ரஜினியை நேரில் சந்தித்து பேசி வருகின்றனர். தன்னை சந்திக்க வருபவர்களிடம் தமிழக அரசியல் சூழல் குறித்து ரஜினி ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.