டாஸ்மாக் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கெச்சிலாபுரம் மக்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுக்கை

Chennaiyil Thiruvaiyaru Season 11 (Day 7)

கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் இருந்த டாஸ்மாக் கடையை கிழவிப்பட்டி ஊராட்சியில் உள்ள கெச்சிலாபுரத்தில் அமைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. கெச்சிலாபுரத்தில் அமையுள்ள டாஸ்மாக் கடை அருகே பள்ளி மற்றும் கல்லூரி இயங்கி வருவதாலும், கெச்சிலபுரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ளதாலும், மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் அப்பகுதியில் டாஸ்மாக் அமைக்க கூடாது என்பதனை வலியுறுத்தி அக்கிராமத்தினை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.டாஸ்மாக் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் தங்களது கோரிக்கை மனுவினையும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.