சிறை துறை டி.ஐ.ஜி ரூபா பணியிட மாற்றம்

Vignesh Shivan thanks one and all for success of Naanum Rowdey Thaan

கர்நாடக மாநிலத்தில் சிறைதுறை டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்த ரூபாவை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறபிக்கபட்டுள்ளது. ரூபா அவர்கள் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  சிறையில் உள்ள சசிகலாவிற்கு சட்டத்திற்கு புறம்பாக சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக சசிகலா தரப்பினர் 2 கோடி ரூபாய் வரை டி.ஜி.பி சத்திய நாராயணராவிற்கு லஞ்சம் கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை ரூபா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. சலுகைக்கு உள்ளான புகார் குறித்து உயர்மட்ட விசாரனை நடை பெற இருந்த நிலையில் ரூபா பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.