பெட்ரோல் விலை தினமும் மாற்றப்படுவதாக, இந்தியன் ஆயில் அறிவிப்பு

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை விலை நிலவர அடிப்படையில் தினம்தோறும் பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளது என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது வருகின்ற 16ஆம் தேதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுமா என்பது குறித்த தகவல் வெளிவரவில்லை.

புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், சண்டிகர் ஆகிய ஐந்து நகரங்களில் சோதனை முயற்சியாக, பெட்ரோல்-டீசல் விலை ஏற்கனவே நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.