நினைவெல்லாம் நீயடா விமர்சனம்

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில், ராயல் பாபு தயாரிப்பில், ஆதிராஜனின் கதை, திரைக்கதை, வசனம் இயக்கத்தில், பிரஜன், மனிஷா யாதவ், சினாமிகா, கேப்ரில்லா, மனோபாலா, மதுமிதா, ரஞ்சன்குமார், ஸ்ரீ பிரியங்கா, ரெடின் கிங்ஸ்லி, வழக்கு எண் முத்துராமன், ரோஹித், யுவலட்சுமி, அயலி அபி நட்சத்திரா, யாசர், பி.எல்.தேனப்பன், தண்டபாணி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் நினைவெல்லாம் நீயடா.

பள்ளி நாட்களில் உருவான  தன்னுடைய காதலை நினைத்து, பிரிந்து சென்ற தன் காதலி நிச்சயம் தனக்காக காத்திருப்பார், தன்னை தேடி வருவார் என்ற நம்பிக்கையில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாயகன் பிரஜின். 

பிரஜின் தன்னை ஒருதலையாக உயிருக்கு உயிராக காதலிக்கும் மாமன் மகளான மனிஷா யாதவை நிராகரித்து வருகிறார்.

தன் காதலி எங்கே இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்று தெரியாத பெண்ணுக்காக காத்திருப்பதை விட, உன்னையே உயிராக நேசிக்கும் மனுஷன் திருமணம் செய்து கொள் என்று பெற்றோர்களும் நண்பர்களும் கட்டாயப்படுத்துகிறார்கள். அவர்களின் கட்டாயத்தின் பெயரில் மனிஷா யாதவை பிரஜின் திருமணம் செய்து கொள்கிறார்.

பிரஜினின் திருமணம் நடந்து முடிந்த கொஞ்ச நாட்களிலேயே அவர் எதிர்பார்த்தது போலவே, அவரது காதலி அவரை தேடி வருகிறார். 

பிரஜின் நினைத்தது போலவே தன் காதலி திருமணம் செய்யாமல் தனக்காகவே தன்னைத் தேடி வந்திருப்பது தெரிந்த பிரஜின் தன் காதலியுடன்  சேர்ந்தாரா? இல்லை மனைவி மனிஷா யாதவை  ஏற்றுக் கொண்டு மனைவியுடன் வாழ்ந்தாரா என்பதே நினைவெல்லாம் நீயடா படத்தோட மீதி கதை

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : ஆதிராஜன்

கலை இயக்குனர்: முனிகிருஷ்ணா

ஒளிப்பதிவாளர் : ராஜா பட்டாச்சார்ஜி

படத்தொகுப்பு : ஆஷிஷ்

ஸ்டண்ட் மாஸ்டர் : பிரதீப், தினேஷ்

பாடல் வரிகள் : இளையராஜா, பழனி பாரதி, சிநேகன்

பாடகர்கள் : யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் அனன்யா பட், சிரீஷா பகவத்துல்லா, ஹரிப்ரியா

நடனம் : தினேஷ், தீனா

ஆடை: பிரதீப்

பிஆர்ஒ : ஏ. ஜான்