12 இடங்களில் காஷ்மீரில் என்.ஐ.ஏ அதிரடி ரெய்டு

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக கடந்த சில வாரங்களாக தேசிய புலனாய்வு பிரிவு (NIA) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பிரிவினைவாத கட்சிகளின் தலைவர்கள் சிலர் சமீபத்தில் இதற்காக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்று காலை காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகர் மற்றும் பாராமுல்லா பகுதிகளில் உள்ள 12 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.