பி.எஸ்.என்.எல். புதிய திட்டம், ரூ.339க்கு அன்லிமிட்டெட் கால்ஸ், தினமும் 2ஜிபி டேட்டா

ரிலையன்ஸ் ஜியோவை எதிர்கொள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. புதிய திட்டத்தின் படி தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாதம் ரூ.339 ரீசார்ஜ் செய்து புதிய சலுகையை பெற முடியும் என பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பொது மேலாளர் சஞ்சீவ் தியாகி தெரிவித்துள்ளார். மாதம் முழுக்க 30 ஜிபி டேட்டா மற்றும் தினமும் 25 நிமிடங்களுக்கு இலவச வாய்ஸ் கால்ஸ் பெற முடியும். தினசரி 25 நிமிட கால் செய்ததும், நிமிடத்திற்கு 25 பைசா கட்டணத்தில் அழைப்பு கட்டணங்கள் வசூலிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

பி.எஸ்என்.எல் அறிவித்துள்ள புதிய திட்டம் ஏப்ரல் 1, 2017 முதல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என பி.எஸ்.என்.எல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த பிரைம் திட்டத்திற்கு போட்டியாக ஏர்டெல், ஐடியா, வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் பி.எஸ்.என்.எல் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.