2017ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் பட்டத்திற்கான கிரீடம் மனுஷி சில்லார்க்கு சூட்டப்பட்டது

மும்பையில் உள்ள யாஷ் ராஜ் ஸ்டூடியோவில் 52ஆவது மிஸ் இந்தியா பட்டத்திற்கான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 30 மாநிலங்களை சேர்ந்த பல்வேறு அழகிகள் கலந்து கொண்டு மேடையில் வலம்வந்தனர். இறுதியாக நடுவர்குழுவினர் ஹரியான மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லாரை மிஸ் இந்தியா என்று அறிவித்தனர். மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தலித்த மனுஷிக்கு மிஸ் இந்தியா அழகிப் பட்டத்திற்கான கிரீடம் சூட்டப்பட்டது. இரண்டாவது இடத்தை ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த சனா தூவாவும், மூன்றாம் இடத்தை , பீகாரைச் சேர்ந்த பிரியங்கா குமார் ஆகியோர் பெற்றனர்.