ஐஸ்வர்யாராயின் தற்போதைய சம்பளம்

 

 

Azhagu Kutty Chellam

இந்திய சினிமாவில் அசைக்கமுடியாத நடிகை என்றால் அது ஐஸ்வர்யா ராய் என்றே சொல்லலாம். ஒரு நடிகைக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் பெற்றபின்பும் சினிமாவில் கதாநாயகியாக வலம்வருவதும் மேலும்,  தனது சம்பளத்தை 9 கோடி வரை உயர்த்தியுள்ள பெருமையும் ஐஸ்வர்யா ராய்க்கு பொருந்தும்.

தென்னிந்திய படங்களில் கடைசியாக நடித்த எந்திரன் படத்தில் நடிக்க ரூ.6 கோடி சம்பளம் பெற்றார். தற்போது தனது மார்க்கெட் உயர்ந்துள்ளதாக கூறும் அவர் ’உய்யலவட நரசிம்ம ரெட்டி’ படத்தில் சிரஞ்சிவியுடன் ஜோடிபோட 9 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார். இருந்தாலும் அதிர்ச்சிஅடையாத இயக்குநர் ராம்சரண் ஐஸ்வர்யாவை இழுத்துவர முடிவு செய்து அட்வான்ஸ் தொகையையும் கொடுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.