கண்தான விழா விழிப்புணர்வு பேரணி

 

 

கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புசங்கம் சார்பில் தேசிய இரு வார கண்தான விழாவினை முன்னிட்டு கண்தானம் குறித்த விழிப்புணர்வு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கமலவாசன் தலைமை வகித்தார். நிலைய மருத்துவ அதிகாரி மருத்துவர் பூவேஸ்வரி முன்னிலை வகித்தார். மருத்துவர் சரவணாவித்யா வரவேற்றுப்புரையாற்றினார்.

விழிப்புணர்வு பேரணியை மாவட்ட திட்ட மேலாளர் மருத்துவர் குமாரசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மருத்துவமனை முன்பு தொடங்கி விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகளின் வழியாக மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது. இதில் பள்ளி மாணவிகள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் திரளாக கலந்து கொண்டு கண்தான விழிப்புணர்வு குறித்து கோஷங்களை எழுப்பியவாறு பேரணியில் கலந்து கொண்டனர்.இறுதியில் மருத்துவர் உமா நன்றி கூறினார்.