நிலவேம்பு கசாயத்தை மீனவ மக்களுக்கு வீடுவீடாக சென்று வழங்கினார் மதுசூதனன்

ஆர் கே நகர் தொகுதியில் அதிமுக சார்பில்  டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மீனவ சமுதாய மக்கள் வாழும் பகுதியான  தண்டையார்பேட்டை 43-வது வட்டத்தில்  விழிப்புணர்வு முகாம் வடசென்னை ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ்  தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக அவைத்தலைவர் இ.மதுசூதனன் கலந்து கொண்டு மீனவ மக்களுக்கு வீடுவீடாக சென்று  நிலவேம்பு மூலிகை காயத்துடன் பால் பாக்கெட் ஆகியவை  வழங்கி முகாமை துவக்கி வைத்தார்.

இதில் முன்னாள் எம்எல்ஏ. குப்பன், நீலாங்கரை முனுசாமி ஆகியோர் உடன் வழங்கினர். மேலும்  மீனவர்கள் சார்ந்த 4,000-ஆயிரம் பேர்களுக்கு நிலவேம்பு மூலிகை கசாயத்துடன் பால் பாக்கெட்டும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்  ஆர் எஸ் ஜெனார்த்தனம், ஏ.கணேசன், வி.அலேக்ஸ், எஸ் முருகன், இராயபுரம் எம் எம் கோபி,  வட்ட செயலாளர்கள் அருண்பிரசாத், சந்தனசிவா,  ஆர் நித்தியானந்தம், சீனிவாசபாலாஜி, எம்  ராமமூர்த்தி, மற்றும் பாக பொருப்பாளர்கள் மக்கள் மகேந்திரன், எம்.விஜயகுமார்,  ஜெசிபி.எஸ் சுரேஷ், டாஸ்மாக் குமார்,  ஏ. வினாயகமூர்த்தி,  சுஜாதாமதனகோபால், மற்றும் மீனவ மாவட்ட நிர்வாகிகள் பிற அணி அமைப்பு நிர்வாகிகள் பலர் இருந்தனர்