உள்ளாட்சித் தேர்தல் உயர்நீதிமன்றத்தில் மனு


 

சென்னை உயர்நீதிமன்றத்தில், உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் எனக் கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவில், “தமிழகத்தில் அரசியல் குழப்பங்கள் நடந்து வருவதால் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தாமதமாக்கப்பட்டு வருகிறது. அரசியல் காரணங்களுக்காக தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே 15 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை அவசர வழக்காக எடுத்துக்கொண்டு வரும் செப்.1ம் தேதி நீதிமன்றம் இதை விசாரிக்க உள்ளது.