ஜூலை 3 ஆம் வாரம், தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடக்கம்

தமிழக சுகாதாரத்துறை வெளியிடுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 3 ஆம் வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது என்றும், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தமிழகத்தில் ஒருவாரத்தில் விநியோகிக்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு தொடங்கிய பிறகே மாநில கலந்தாய்வு நடைபெறும் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான அறிவிப்பு எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் சுகாதார துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.