தாமரை வடிவில் பளபளக்க காத்திருக்கும் ஜெயலலிதா சமாதி

ஜெயலலிதாவின் மணிமண்டபத்தை வடிவமைக்க தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போது அந்த மணிமண்டபத்தின் திட்ட வரைவு வெளியிடப்பட்டுள்ளது. தாமரை போன்ற வடிவத்தில் அமைந்துள்ள ஒரு திட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் மேல், வட்ட வடிவில் ஒரு கிரீடம் போலவும், கோபுரத்தின் உச்சி போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் சமாதிக்கு பின்னால் இது அமையும்போது, இரண்டும் சேர்ந்து ஒரு முழு கிரீடம் போல காட்சியளிக்கும் என தெரிகிறது.