திலீப் குற்றவாளி இல்லையெனில், சட்டத்தின் முன் நிரூபிக்கட்டும் – பாவனா

நடிகை பாவனா பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப் போலீஸ் காவலில் மேலும் ஒருநாள் அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், நடிகை பாவனா தனது முகநூலில் பதிவிட்டுள்ள செய்தியில்,

நடந்த சம்பவங்கள் தொடர்பாக, ஊடகங்களை சந்தித்து விளக்கமளிக்கும் மனநிலையில் தற்போது இல்லை என்றும், எனக்கு யார் மீதும் சந்தேகம் எழுந்ததில்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளேன். நடிகர் திலீப்புடன் பல படங்களில் நடித்துள்ளேன். சில தனிப்பட்ட பிரச்சனைகளால் நட்பை முறித்து கொண்டோம். திலீப் குற்றவாளி இல்லையெனில், அவர் அதனை சட்டத்தின் முன் நிரூபிக்கட்டும். ஒரு நிரபராதி தண்டிக்கப்படகூடாது, என்பதை போல் குற்றவாளி சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.