ரூபாய் 8.78 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து இன்று காலை திருச்சி வந்த டைகர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான்நுண்ணறிவு  பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சேகர் என்பவரது உடைமைகளை சோதனை செய்தபோது அவர் உருளை வடிவில் 297 கிராம் தங்கத்தை  மறைத்து எடுத்து வந்ததை பறிமுதல் செய்தனர்.  இதன் மதிப்பு ரூபாய் 8.78 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.