மும்பை வெள்ளத்தில் 5 பேர் இறந்துள்ளதாக தகவல்

கடந்த இரு தினங்களாக மும்பையில் பெய்து வரும் கனமழையால், அந்நகரமே நீரில் மூழ்கியுள்ளது. மழை தொடர்பான பல்வேறு சம்பவங்களில் இதுவரை 5 பேர் இறந்துள்ளதாக மும்பை மாநகராட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் பலரை காணவில்லை என புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் பெரும்பாலானோர், தற்போது தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மும்பை முழுவதும் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், மும்பை உட்பட மகாராஷ்டிர கரையோர மாவட்டங்களில், இன்று முழுவதும் கடும் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.