பள்ளி மாணவரை தனது நாற்காலியில் அமர வைத்து கவுரவித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி

ஆச்சார்யா கல்விக் குழுமத்தின் கீழ் இயங்கும் தேங்காய்திட்டு ஆச்சார்யா பால சிக்‌ஷா மந்திர் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவர் ரக்‌ஷன், முதன் முறையாக சர்வதேச அளவில் நடைபெற்ற கணிதம் மற்றும் ஆங்கில ஒலிம்பியாட்களில் முதலிடம் பிடித்து புதுச்சேரிக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.