அறம் இரண்டாம் பாகம் தொடங்க முடிவு

நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘அறம்’. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. முதல் நாள் மட்டுமே வசூல் மிக குறைவாக இருந்தது. அதற்கெடுத்த நாள் முதல் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் பெரும் வசூலை ஈட்டி வருகிறது.

இந்நிலையில், ‘அறம்’ படத்தின் தொடர்ச்சியாக 2-ம் பாகத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இது குறித்து தயாரிப்பாளர் ராஜேஷ், “இரண்டாம் பாகத்தின் பணிகள் துவங்கப்பட்டு விட்டது. நயன்தாராவும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். விரைவில் படக்குழு குறித்த முழுவிவரங்களும் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.