கோவை வெள்ளலூர் அரசு பள்ளி மாணவ – மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

கோவை வெள்ளலூர் அரசு பள்ளி மாணவ – மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வகுப்புகளை புறக்கணித்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக பள்ளி வாயில் முன்பு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.