கேரளாவில் உயிர்இழந்த முருகன் குடும்பத்திற்கு முதல்வர் ரூபாய் 5 லட்சம் நிதிஉதவி

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் பாரிப்பள்ளி-கொல்லம் சாலையில், 6.8.2017 அன்று ஏற்பட்ட சாலை விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த, திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், சமூகரெங்கபுரம் கிராமம், மஜரா துரைகுடியிருப்பு மேலூரைச் சேர்ந்த திரு. கணபதி என்பவரின் மகன் முருகன் என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த முருகன் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சாலை விபத்தில், முத்து என்பவர் பலத்த காயமடைந்துள்ளார் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன்.

இந்த சாலை விபத்தில் உயிரிழந்த முருகன் அவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்த திரு. முத்து அவர்களுக்கு 50,000/- ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.