முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் உருவபொம்மைகள் எரிப்பு

பல்வேறு தடைகளை மீறி அதிமுகவின் பொதுக் குழு கூட்டம்  இன்று வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கூடியது. இதில் சசிகலா, தினகரனுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தினகரன் ஆதரவாளர்கள் ஆங்காங்கே முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

அந்த வகையில் அடையாறில் உள்ள தினகரன் வீட்டருகே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் உருவபடங்களை காலணியால் போட்டு அடித்தனர். பின்னர் அவர்களுக்கு எதிரான கோஷங்களை இட்டனர். இதைத் தொடர்ந்து அந்த உருவபொம்மைகளை எரித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.