அசத்துறாண்டா – திரைவிமர்சனம்

Oyee, Upcoming film

விசாகப்பட்டினத்தில் கல்லூரி ஒன்றில் இறுதியாண்டு படித்து வருகிறார் நாயகன் ஆசிஷ் ராஜ். அந்த கல்லூரியின் டாப்பராகவும் வலம் வருகிறார். இந்நிலையில், அதே கல்லூரியில் படிக்கும் எம்.எல்.ஏ.வின் தம்பிக்கும், ஆசிஷ் ராஜுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இந்நிலையில், நாயகி ருக்சார் மீர், ஆசிஷ் படிக்கும் கல்லூரியில் வந்து சேர்கிறாள்.  ஆசிஷ் ராஜுக்கும், எம்.எல்.ஏ.வின் தம்பிக்கும் இடையே மீண்டும் ஒருநாள் பிரச்சனை வர, நாயகி ருக்சார் நாயகனை தடுத்து நிறுத்துகிறார்.

இதையடுத்து இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறிவிடுகிறது. இவர்களது காதலுக்கு இருவரது வீட்டாரும் சம்மதம் தெரிவிக்க இருவருக்கும் திருமணம் செய்து வைக்கவும் ஏற்பாடுகள் நடக்கிறது.  இந்நிலையில், ஆசிஷ் ராஜின் தந்தை சுமன், அவரது மனைவியுடன் கோவில் ஒன்றில் தர்ப்பணம் கொடுக்கிறார். இதை நாயகி ருக்சார் மீர் பார்த்து விடுகிறாள். அவர்கள் சென்ற பிறகு, ஐயரிடம் சென்று யாருக்கு தர்ப்பணம் கொடுத்தார்கள் என்று ருக்சார் கேட்க, காலமான அவர்களது ஒரே மகனுக்கு கொடுத்ததாக ஐயர் கூற, இதை கேட்டு அதிர்ச்சியடையும் ருக்சார், இந்த விஷயத்தை ஆசிஷ் ராஜிடம் சொல்கிறாள்.

இதனால் ருக்சார் மீது கோபமடையும் ஆசிஷ், ருக்சாருடன் சண்டை பிடிக்கிறார். மேலும் தனது பெற்றோரிடம் இந்த விஷயம் குறித்து மறைமுகமாக கேட்க முயற்சி செய்கிறார். அதில் அவருக்கு சில தகவல்கள் கிடைக்க, அடுத்தடுத்து சில தகவல்களையும் சேகரிக்கிறார். இந்நிலையில், மும்பையில் ஒரு ரவுடி கும்பல் ஆசிஷ் ராஜை தேடி வருகிறது.  பின்னர் ஆசிஷ் விசாகப்பட்டினத்தில் இருப்பது அந்த கும்பலுக்கு தெரியவர, அந்த கும்பல் ஆசிஷை கண்டுபிடித்ததா? ஏன் அந்த கும்பல் ஆசிஷை தேடி வருகிறது? ஆசிஷ் யார்? அவருக்கும் மும்பையில் இருக்கும் ரவுடி கும்பலுக்கும் என்ன சம்மந்தம்? ஆசிஷ் – ருக்சார் திருமணம் நடந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்