ஆர்த்தி ஓவியாவுக்காக டிவிட்டியது

ஆர்த்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நாள் முதல் பல்வேறு ட்விட்டுகளை பதிவிட்டு வருகிறார். அவர் உள்ளே இருந்தபோது ஜூலிக்கு எதிரி போல இருந்தார். அவர் வெளியேறிய உடன்தான் ஜூலியின் உண்மையான முகம் தெரிய வந்தது. ஜூலிக்கு ஆர்த்தி எவ்வளவோ பரவாயில்லை என்பது. மேலும் வெளியேறிய நாள் முதல் ஆர்த்தி பிக்பாஸ் குறித்து பல ட்விட்டுகளை பதிவிட்டு வருகிறார்.  

ஆனாலும் அவர் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களே வருவதாக வருத்தம் தெரிவிக்கிறார். இதனால் இனிமேல் பிக்பாஸ் குறித்து எதுவும் பேசமாட்டேன் என கூறியுள்ளார். அது மட்டுமின்றி தனது புதிய ட்டுவிட்டில் ஓவியா குறித்து கூறி உள்ளார். இந்த வாரம் ஓவியா வெளியேறுவது கிட்டதட்ட உறுதியாகி விட்டது. எனவே அவர் அது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், நீ வெளியே வாடி செல்லம். உனக்கு தாய் போல 4 கோடி பேர் உள்ளோம் என கூறி உள்ளார்.