கால் டாக்ஸி டிரைவராக அருள் நிதி நடிக்கிறார். 

 

kamal hassan Sings for Gowtham Karthik

‘பிருந்தாவனம்’ படத்துக்குப் பிறகு, நடிகர் அருள்நிதி ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் மாறன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. விரைவில் வெளியாகப்போகும் இந்தப் படம் பற்றி அருள்நிதி கூறுகையில், “இரவுக்கு ஆயிரம் கண்கள் பட இயக்குநர் மாறனை எனக்கு இரண்டு வருடத்துக்கு முன்பே தெரியும். அப்போது வேறு ஒரு கதையுடன் என்னை சந்தித்தார். அந்தக் கதையை உடனே பண்ண முடியவில்லை. ‘பிருந்தாவனம்’ படம் முடித்த பிறகு, நிறைய கதைகள் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ பற்றி சொல்லி, மாறனிடம் கதை கேட்கச் சொன்னார்கள். அவரிடம் கதை கேட்டேன். கதை சொல்லும்போது முழு திரைக்கதையும் பற்றி ஒரு மூன்றரை மணி நேரம் விரிவாகச் சொன்னார்.ரொம்ப நம்பிக்கையுடன் திரைக்கதை பற்றிச் சொன்னார். தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால்கூட திரைக்கதைப் பற்றி எந்தக் கேள்வியானாலும் சொல்வார்.

அவர் சொன்னதை அப்படியே திரைக்குக் கொண்டு வருவார் என்ற நம்பிக்கையில்தான் இந்தப் படம் பண்ணினேன். ஒரே நாளில் நடக்கும்படி இதன் கதை உள்ளது.  இதில், கால் டாக்ஸி டிரைவராக இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். இதற்காக நான் சில நாட்கள் கால் டாக்ஸி டிரைவராகவே மாறினேன். என் வீட்டுக்கு அருகே உள்ள ஒரு கால் டாக்ஸி அலுவலகத்துக்குப் போய், ஒரு கால் டாக்ஸியை எடுத்துக்கொண்டு இரவு முழுதும் ரவுண்ட் அடித்தேன். கால் டாக்ஸி ஓட்டுபவர்களின் பேச்சு, பாடி லாங்குவேஜ் போன்றவற்றை கத்துக்கொண்டு தான் நடிக்கவே போனேன்,” என்றார்.