ஏ.கே.ஜோதி தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்பு

இந்திய தேர்தல் தலைமை ஆணையாளர் நஜீம் ஜைதி பதவி காலம் நேற்றோடு முடிவடைந்ததையொட்டி புதிய இந்தியதேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையாளராக அச்சல் குமார் ஜோதி பதவியேற்றுள்ளார். மோடி முதல்வராக இருத்தபோது குஜராத் மாநிலத்தின் தலைமை செயலாளராக அச்சல் குமார் ஜோதி பதவி வகித்துள்ளளார். அதை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையராகவும் ஏ.கே.ஜோதி நியமிக்கப்பட்டார்.