மீண்டும் உத்தரபிரதேசத்தில் ரயில் விபத்து

மூன்றாவது முறையாக மீண்டும் உத்தரபிரதேசத்தில் ஒரு ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.  சக்திபுன்ச் எக்ஸ்பிரஸ் இன்று ஜபல்பூரில் இருந்து உத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா அருகில் சென்ற போது ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. மொத்தம் 7 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

அனைத்து பெட்டிகளிலும் உள்ள பயணிகள் இறக்கி விடப்பட்டனர். தகவல் தெரிந்ததும் ரயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து ஆய்வு செய்து வருகின்றனர். தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளனர். இன்று காலை 6.25மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.