படப்பிடிப்பின் போது நடிகை கங்கனா ரனாவத்துக்கு விபத்து

‘தாம் தூம்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கங்கனா ரணாவத்.  ஜான்சி ராணியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் மணிகர்னிகா என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. சக நடிகர் நிஹர் பாண்டியாவுடன் வாள் சண்டையிடுவது போன்ற காட்சியில் கங்கனா ரனாவத் நடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது நிஹர் பாண்டியா வீசிய வாளில் இருந்து தப்ப வேண்டிய கங்கனா சிறிது தடுமாறியுள்ளார். உடனடியாக வாள் கங்கனாவின் நெற்றியை பதம் பார்த்துள்ளது. படப்பிடிப்பின் போது பலத்த காயம் அடைந்த நடிகை கங்கனா ரனாவத் ரத்தம் கொட்டிய நிலையில் ஐதராபாத்தில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அதி தீவிர பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு கங்கனாவின் நெற்றியில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளனர்.