நாளை முதல் புதிய ரூ.200 நோட்டு – ரிசர்வ் வங்கி

நாளை முதல் புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.

அதைத் தொடர்ந்து 50 ரூபாய் நோட்டும் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் புதிய 200 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தும் அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இந்நிலையில், நாளை முதல் புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது