34 விவசாயிகள் 8 நாட்களில் தற்கொலை

34 விவசாயிகள், எட்டு நாட்களில்  மகராஷ்டிரா மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தியாவில் சில மாநிலங்களில் கன மழையும் சில மாநிலங்களில் கடும் வறட்சியும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில் 580 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என அவுரங்காபாத் டிவிஷனல் கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதில் கடந்த 8 நாளில் 34 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மழைப் பற்றாக்குறை காரணமாக கடுமையான வறட்சி மகாராஷ்ராவில் காணப்படுவதாகவம் சராசரி மழையளவில் 75 சதவீதம் கூட பெய்யவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது