14 வருடத்தை நிறைவு செய்த நயன்தாரா

14 வருடத்தை நிறைவு செய்திருக்கிறார். ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன் என டூயட் பாடி தமிழில் ஐயா படம் மூலம் அறிமுகமான நடிகை நயன்தாரா இன்றுடன் சினிமாவில் டேக் ஆக்‌ஷனில் குதித்து 14 வது வருஷத்தை நிறைவு செய்கிறார். ரஜினி, விஜய், அஜித் விக்ரம், சூர்யா, சிம்பு தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி வரைக்கும் ஒரு பெரும் ரவுண்டே வந்துவிட்டார்.அதெல்லாம் போக தனியாக மாயா, அறம் என அவருக்கு மட்டுமே மேஜர் ரோல் உள்ள படங்களிலும் நடித்து மற்ற நடிகைகளை வாய்பிளக்க வைத்து வருகிறார் நயன்தாரா. துவக்கத்தில் சில காதல் சர்ச்சைகளில் சிக்கியிருந்தவர் அதன்பின்னால் நடித்த எல்லா படங்களுமே அவருக்கு ஏறுமுகமாகவே அமைந்திருந்தது.அவரின் திரைவாழ்க்கையை திருப்பிப்போட்ட படம் என்றால் அஜித் நடித்த பில்லா படத்தைச்  சொல்லலாம். அதுவரை அதிகம் கவனிக்கப்படாத அவருக்கு அதில் கொடுக்கப்பட்ட சாகசமான வேடமும் சில டூ பீஸ் காட்சிகளும் அவரை வேறு லெவலுக்கு மாற்றியது.த்ரிஷா இல்லையினா நயன்தாரா என்று சொலவடை சொல்லும் அளவுக்கு வளர்ந்துவிட்ட நயன்தாரா, நடிகை சிறிய வட்டத்துக்குள் மட்டுமே தன்னை வைத்துக்கொள்ளாமல் தயாரிப்பாளர் என்கிற புதிய அத்தியாயத்தையும் அவரின்  இந்த 14 வது ஆண்டில் அறம் எனும் படத்தின் வழியாக தொடங்கி இருக்கிறார்.இந்நிலைய அவரது இந்த 14 வது ஆண்டு நிறைவை அவரின் பல  ரசிக, ரசிகைகள் கொண்டாடி வருகின்றனர்.