மானாமதுரை அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை

admk-secretary-killed-in-manamaduraiசிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா கல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரேசன் (வயது55). விவசாயியான இவர், அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்து வந்தார்.இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பாண்டி (52) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று மாலையில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளை கதிரேசனும், அவரது மனைவி கீதாவும் (49) வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர்.அப்போது வயல் பகுதியில் கணவன்–மனைவியை பாண்டி உள்பட 9 பேர் வழிமறித்து அரிவாளால் வெட்டினார்கள். இதில் கதிரேசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.காயம் அடைந்த கீதா சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து கதிரேசனின் மகன் வேல்முருகன் கொடுத்த புகாரின்பேரில் மானாமதுரை சிப்காட் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.இந்த கொலையில் தொடர்புடைய பாண்டி, மாரி, விஜயா உள்ளிட்ட 9 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.