காஞ்சியில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பு ஜெயலலிதா பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு

TVR_JAYA_ECAMPஉத்திரமேரூர் தொகுதிகுட்பட்ட பகுதியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிரசாரத்திற்காக பிரம்மாண்டமான மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மேடை அருகே ஹெலிபேட் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. பிரசாரம் மாலை நடைபெறுவதால் ஒளிதரும் பிரம்மாண்டமான மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கான மக்கள் கூடும் நிலையில் பொது மக்களை சீராக வரிசையில் கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்க பல்வேறு இடங்களில் கட்டைகளால் தடுப்பு அமைக்கப்பட்டு வருகின்றன.ப்பணிகளை காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருமான வாலாஜாபாத் பா.கணேசன் மற்றும் தேர்தல் பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.42 ஏக்கர் பரப்பளவில் உள்ள பிரம்மாண்ட மைதானத்தில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் காஞ்சீபுரம், திருவள்ளுர், திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 18 பேரை முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தி வாக்குகள் சேகரிக்கிறார்.