மகன் ஆத்விக்காக பள்ளிக்கூடம் சென்ற அஜித்

நடிகர் அஜித் எவ்வளவு பெரிய உச்சத்தை அடைந்தாலும், எப்போதும் எளிமையாகவும், அடக்கத்துடனும் இருக்கும் இயல்புடையவர். கேமராவுக்கு முன்னால் மட்டுமே நடிக்கத் தெரிந்தவர் அஜித். திரையுலகத்திலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி அஜித்தின் இந்த இயல்பிற்காகவே இவரை  ரசிகர்கள் கொண்டாடுகினறனர்.சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அவர், சிறந்த குடும்பத்தலைவனாகவும் இருக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தன் மகள் அனோஷ்காவுக்காகவும், மகன் ஆத்விக்காகவும் நேரம் ஒதுக்கி அவர்களோடு பொழுதைக் கழிக்கிறார். பிறகு, கிச்சன் கில்லாடியாக மாறி தன் குடும்பத்தினருக்கு ஆசை ஆசையாக தோசை வார்த்துக் கொடுத்தும், மணக்க மணக்க பிரியாணி செய்து கொடுத்தும் அசத்துகிறார்.இந்நிலையில், தனது மகன் ஆத்விக்காக பள்ளிக்கூடம் போய் வரும் புதிய பொறுப்பையும் ஏற்றுள்ளார்.  அஜித் தன் மகன் ஆத்விக்கை பள்ளிக்கு அழைத்துப் போய், அங்கு நடந்த பேரண்ட்ஸ் மீட்டிங்கிலும் பங்கேற்று, மீண்டும் வீட்டுக்கு மகனை அழைத்து வருந்துள்ளார். இதை ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.