பெற்ற மகள்களிடம் பாலியல்வன்செயலில் ஈடுபட்ட தந்தை கைது

satara-rape-

மகாராஷ்டிராவில் தனது மகள்கள் 2 பேரை கற்பழித்த 40 வயது தந்தையை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
இது பற்றி மூத்த காவல் ஆய்வாளர் டோலாஸ் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உல்ஹாஸ்நகரை சேர்ந்த நபர் ஒருவருக்கு (பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி குற்றவாளி பெயர் வெளியிடப்படவில்லை) 13 மற்றும் 7 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.அவர்கள் இருவரையும் கடந்த ஒரு வருடத்தில் பலமுறை அவர் கற்பழித்துள்ளார். இதனை அடுத்து அவர் மீது ஐ.பி.சி.யின் பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் பாலியல் வன்முறையில் இருந்து குழந்தைகளை காக்கும் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.