நடிகை பிரதியுஷா என்னை அழைக்கிறார், நான் அவரிடம் செல்கிறேன் என்ற ராகுல் மீது வழக்கு

மும்பை: நடிகை பிரதியுஷா பானர்ஜியை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலர் ராகுல் ராஜ் சிங் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த பிரதியுஷா பானர்ஜி(24) கடந்த 1ம் தேதி மும்பை கோரிகாவ்ன் பகுதியில் உள்ள தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசார் பிரதியுஷாவின் காதலர் ராகுல் ராஜ் சிங்கிடம் கடந்த சனிக்கிழமை 14 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் ராகுல் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறி மருத்துவமனையில் சேர்ந்துவிட்டார்.

06-1459923953-pratyusharahul-600