‘துருவங்கள் 16’

 

‘நரகாசூரன்’ படம், கதை சம்பவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுவதால், பாடல்கள் இல்லாமல் உருவாகிறது. ரகுமான் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து உருவான ‘துருவங்கள் 16’ பட வெற்றிக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படம் ‘நரகாசூரன்’. இதில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண், மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. ‘துருவங்கள் 16’ போலவே ஊட்டி பின்னணியில் இப்படத்தின் கதை சம்பவங்கள் நடக்கிறது. இதில், அரவிந்த் சாமியை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கதை சம்பவங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்பதால், ‘துருவங்கள் 16’ போல இப்படத்தையும் பாடல்கள் ஏதுமின்றி உருவாக்க முடிவு செய்துள்ளார் கார்த்திக் நரேன்.  தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தை கெளதம் மேனன் மற்றும் கார்த்திக் நரேன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.