திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவு- கே. என் நேரு

k.n1திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவு- கே. என் நேரு

திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைக்கு அனைத்துத் தரப்பு மக்களிடமும் ஆதரவு அதிகரித்துள்ளது என திருச்சி தெற்கு மாவட்டச் செயலரும், மேற்குத் தொகுதி திமுக வேட்பாளருமான கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திமுகவின் தேர்தல் அறிக்கை மிக சிறப்பாக இருக்கிறது. இதன் காரணமாக அனைத்துத் தரப்பு மககளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது.திருச்சி மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் நிச்சயமாக வெற்றியைப பெறுவார்கள். என அவர் கூறியுள்ளார். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டம், விரிவாக்கப்பட்ட மார்க்கெட், சீரான குடிநீர் விநியோகம் ஆகியவற்றை நாங்கள் செய்து தருவோம் என உறுதியளிக்கிறோம் என்றார் நேரு.முன்னதாக, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் திருச்சி மேற்கு கே.என்.நேரு, திருவெறும்பூர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, லால்குடி அ. செளந்தரபாண்டியன், சிறிரங்கம் எம். பழனியாண்டி, மண்ணச்சநல்லூர் எஸ். கணேசன், துறையூர் செ. ஸ்டாலின்குமார் ஆகியோர் திருச்சியிலுள்ள தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து தங்களது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினர்.