கோவில்பட்டி மார்க்கெட் பகுதியில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள்

 

கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் நகராட்சி சுகாதார அலுவலர்கள் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் 20 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. வணிகர்களும், பொது மக்களும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை தவிர்க்க வேண்டும் என்று எடுத்துரைத்தனர்.