கோவில்பட்டி தாய், மகள் மாயம் போலீசார் விசாரணை

எட்டயபுரம் அருகேயுள்ள தலைக்காட்டுபுரத்தினை சேர்ந்தவர் சோலைராஜ் இவர் துபாயில் பணிபுரிந்து வருகின்றார்;. இவருக்கு திருமணமாகி கற்பகம்(25) என்ற மனைவியும் மகிஷாசோனி(3) என்ற பெண்குழந்தையும் உள்ளது. கணவர் வெளிநாட்டில் இருப்பதால் கற்பகம், கோவில்பட்டி சிந்தாமணி நகரில் தனது தாய் சுப்புலெட்சுமி வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று கற்பகம், தனது குழந்தையுடன் மார்க்கெட் சென்று வருவதாக தனது தாயிடம் கூறி விட்டு சென்றுள்ளார்.

ஆனால் வெகுநேரமாகியும் கற்பகம் வீடு திரும்பாத காரணத்தினால் சந்தேகமடைந்த சுப்புலெட்சு தனது உறவினர்களுடன் கற்பகத்தினை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து சுப்புலெட்சுமி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணமால் போன, கற்பகம் மற்றும் அவரது குழந்தை இருவரையும் தேடி வருகின்றனர்.