எம்.எம்.வித்யாஸ்ரம் பள்ளியில் உலக யோகா தின விழா

கோவில்பட்டியில் உள்ள எம்.எம்.வித்யாஸ்ரம் பள்ளியில் மாணவர்களின் சார்பில் உலக யோகா தினவிழா நடந்தது.பொதுமக்களிடமும் மாணவர்களிடமும் யோகாசனம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டும் யோகாசன செயல்விளக்க பயிற்சி முகாமும் நடந்தது.

சூர்ய நமஸ்காரம், பத்மாசனம், யோகமுத்ரா, தாடாசனம், பிறையாசனம், விருஸ்சிகாசனம் உட்பட பல யோகாசனங்களை மாணவர்கள் செய்து காண்பித்து அசத்தினர். பள்ளி மாணவர்கள் உலக யோகா தினத்தைப் பற்றியும், சுற்றுப்புறத் தூய்மையை பற்றியும் பேசினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் வழிகாட்டுதலின்படி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.