டிக்கெட் இல்லாமல் ரயிலில் போலீசார் பயணம் செய்தால் அபராதம்

டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்தால் போலீசாருக்கு அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. ரயில்வே விதிகளின் படி அபராதம் விதிக்கப்படும் என டிஜிபி, சென்னை காவல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். விரைவு, மின்சார ரயில்களில் டிக்கெட் இல்லாமல் போலீசார் பயணம் செய்வதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ரயில்வே நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.