அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் கோவில்பட்டி அருகே பறிமுதல்

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் ஆய்வாளர் பவுல்ராஜ் தலைமையில் வேலாயுதபுரம் அருகேயுள்ள தனியார் கல்லூரி பகுதியில் வாகனசோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் லாரிகளில் மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மணல் கொண்டுவதற்கான எவ்வித ஆவணங்களோ, மணல் அள்ளுவதற்கான எவ்வித அனுமதி சீட்டு இல்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போலீசார் 2லாரிகளையும் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.