கோவில்பட்டியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி – கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

ஜீலை 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதில் வரை புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணி தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதன் அவசியம் குறித்தும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் விழிப்புணர்வு பேரணியை தாசில்தார் ஜான்சான் தேவசகாயம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணி மெயின்ரோடு, மாதங்கோவில்ரோடு, எட்டயபுரம் ரோடு வழியாக தாலூகா அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இதில் திரளான கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை ஏந்திச்சென்றனர். தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பஸ்களில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.