விஜய் ஆண்டனி நடிப்பில், அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கும் “திமிரு புடிச்சவன்”

பொதுவாக தமிழ் திரை உலகில், ஒரு போலீஸ் அதிகாரியின் கதை என்றாலே நாம் எளிதில் யூகிக்க முடிகிற கதை அமைப்பு, காட்சி அமைப்பு என்றுதான் இருக்கும். 

விஜய் ஆண்டனி நடிப்பில், அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கும் “திமிரு புடிச்சவன்”  வழக்கதிலிருந்து முற்றிலும் மாறுப் பட்டு இருக்கும் என கூறப் படுகிறது.  இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் இனிதே நடந்தது. 

“வழக்கத்தில் இருந்து மாறு பட்டு , இதுவரை பார்த்திராத ஒரு போலீஸ் அதிகாரியின் கதையை கதையாக வடித்து இருக்கிறேன்.ஒரு காவல் நிலையத்தில் நடக்கும் அன்றாட சம்பவங்களே மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அவர்கள் இடையே இருக்கும் பரஸ்பர உறவு இந்த படத்தில் பிரதிபலிக்கும். இந்த கதையை எழுதும் போதே ஒரு பெரிய நட்சத்திரம் நடித்தால் நன்றாக இருக்கும் என்றுதான் நினைத்தேன்.ஐந்து வருடங்களுக்கு முன்னரே விஜய் ஆண்டனி சாரிடம் கதை சொன்னேன். இன்னும் சில காலம் போகட்டும் என்றார். இன்று தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தனக்கென்று ஒரு நட்சத்திர அந்தஸ்தை அடைந்து விட்டதை தொடர்ந்து மீண்டும் அவரிடம் சொன்னேன். இந்த முறை அவர் மறுக்க வில்லை. 

கதாநாயகியாக நிவேதா பெத்தராஜ் நடிக்கிறார். “ஒரு பெண் போலீஸ் கதாபாத்திரத்துக்கு நிவேதா பொருத்தமாக இருக்கும் என்று தோன்றவே அவரை அணுகினோம். ஒரு காவல் அதிகாரியின் மிடுக்கு அவருக்கு நன்றாகவே பொருந்தியது. இந்த படத்தில் அவர் மோட்டார் சைக்கிள் ஓட்ட வேண்டிய காட்சிகள் ஏராளம் உள்ளன, அதற்காகவே அவர் பிரத்தியேகமாக பயிற்சி மேற்கொண்டார்” என்று கூறினார் இயக்குனர் கணேஷா. விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்   

சார்பில்  பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கும் “திமிர் புடிச்சவன்”  மார்ச் 1ஆம் தேதி  துவங்க உள்ளது. தற்போது இசை கோர்ப்பு பணிகள் துவங்கி உள்ளது.