படத்தின் ட்ரெய்லர் பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது – கார்த்தி

படத்தின் ட்ரெய்லர் பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது – கார்த்தி

சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘எழுமின்’.  இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கார்த்தி பேசும்போது, ‘இப்படத்தின் ட்ரெய்லர் பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. நான் காலேஜ், பள்ளி விழாவிற்கு செல்கிறேன். அங்கு எல்லாம், சினிமா பாடலுக்கு நடனம் ஆடுவது வசனம் பேசுவது என்று எல்லாரும் சினிமா நோக்கி போய் கொண்டு இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. அதற்கு இந்த படம் உதாரணமாக இருக்கும். என் பொண்ணுக்கு இந்த படத்தை கண்டிப்பாக காட்டுவேன். என் பொண்ணும் தற்காப்பு கலை கற்று வருகிறாள்.

குழந்தைகளும் சங்கிலி பறிப்பில் ஈடுபடுவர்களை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். பயந்து நடுங்காமல், துணிச்சலுடன் எதிர்த்து போராட வேண்டும். திருப்பி அடிக்க வேண்டும். அதற்கு தற்காப்பு கலைகள் தான் கைகொடுக்கும். அதனால் தற்காப்பு கலைகளை குழந்தைகள் கற்றுக் கொள்ள பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். தைரியமாக இந்த படத்தை எடுத்த இயக்குனருக்கு நன்றி. இந்த படத்தில் நடித்திருக்கிற பசங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்.” என்றார்.