சபாநாயகரை சந்திக்கும் திட்டமில்லை – தங்க தமிழ்செல்வன்

ஆளுநரை சந்தித்து முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் கடிதம் கொடுத்தது தொடர்பாக இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சபாநாயகர் 19 எம்எல்ஏ-க்களுக்கு உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று சபாநாயகரை சந்திக்கும் திட்டமில்லை என குடகு விடுதியில் டிடிவி தினகரன் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார். மேலும் இந்த ஆட்சியை கலைக்கவும் நாங்கள் தயங்க மாட்டோம் என்றும் தினகரனின் வழியில் நாங்கள் நிற்போம் எனவும் ஆட்சியை விட கட்சியே முக்கியம் எனவும் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார்.