கீழடியில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்படுவதாக அமைச்சர் உறுதி

 

சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாரியப்பன் கென்னடி மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு ஆகியோர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் கீழடியில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்களை வைத்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், அருங்காட்சியகம் அமைக்கப்படும் என உறுதியளித்தார்.