100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தினை செயல்படுத்த வலியுறுத்தி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுக்கை

கோவில்பட்டி ஊராட்சிய ஒன்றியத்திற்குட்பட்ட இனாம்மணியாச்சி ஊராட்சியில் கடந்த 1 மாதத்திற்கு மேலாக மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிகள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தினை நம்பி இருந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் பணிகள் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் சங்க தலைவர் ராமசுப்பு, செயலாளர் மணி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.தொடர்ந்து கோரிக்கை மனுவினையும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அளித்தனர்.இதில் சி.பி.எம்.ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு, ஒன்றியக்குழு உறுப்பினர் சின்னதம்பி, கிளை செயலாளர் அழகுசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.